Friday 30 October 2015

Photos

President's Dinner 27.10.2013.
To view the photos: Click Here

Pillaiyar Nonbu 08.12.2013.
To view the photos: Click Here

Mukkombu Picnic 22.12.2013.
To view the photos: Click Here
 
Shiridi Tour 07.03.2014 - 14.03.2014.
To view the photos: Click Here

Bangkok Tour 25.05.2014 - 31.05.2014.
To view the photos: Click Here

Kootu Tirumanam 29.06.2014.
To view the photos: Click Here

Navathirupathy Tour 15 & 16.07.2014.
To view the photos: Click Here

Kubera Poojai 04.08.2014.
To view the photos: Click Here
 
Vilakku Poojai 08.08.2014.
To view the photos: Click Here

Annual Day Competitions 10.08.2014.
To view the photos: Click Here

Annual Day Functions 15.08.2014.
To view the photos: Click Here

1st Nagarathar Chess Festival 15 & 16.08.2014.
To view the photos: Click Here

66th General Body Meeting 18.10.2014.
To view the photos: Click Here

IBCN 2015 - Road Show 14.12.2014
To view the photos: Click Here

Nagarathar Photo Contest 2014
To view the photos: Click Here

Hobby Exhibition 27.12.2014
To view the photos: Click Here

Pillaiyar Nonbu Carnival 2014 27.12.2014
To view the photos: Click Here

Dubai Tour 17.01.2015 - 21.01.2015
To view the photos: Click Here

Thaiyumanavar Thaipoosam 03.02.2015
To view the photos: Click Here


Thalaicauvery Tour 06.02.2015 - 10.02.2015
To view the photos: Click Here

Vayalur Paadhayathirai 15.02.2015
To view the photos: Click Here

Cake Decorating Demonstration 15.03.2015
To view the photos: Click Here

Joint Meeting - Erode Nagarathar Sangam 24.03.2015
To view the photos: Click Here

Yoga & Meditation Workshop 28.03.2015 - 05.04.2015
To view the photos: Click Here

Valmiki Ramayanam Navaham Ubanyasam 28.03.2015 - 05.04.2015
To view the photos: Click Here

Vegetable & Fruit Carving Workshop 19.04.2015
To view the photos: Click Here

Joint Meeting - Salem Nagarathar Sangam 20.04.2015
To view the photos: Click Here

Career Counselling & Guidance Program 02.05.2015
To view the photos: Click Here

Pachai Kavadi Poojai 12.05.2015
To view the photos: Click Here


Joint Meeting - Chidambaram Nagarathar Sangam 18.05.2015
To view the photos: Click Here

158th Kootu Tirumanan - 20.05.2015
To view the photos: Click Here

Yoga Day - Karthigai Meeting - 14.06.2015
To view the photos: Click Here

Life Skill Program - So What? 28.06.2015
To view the photos: Click Here

Joint Meeting - Madurai Nagarathar Sangam 11.07.2015
To view the photos: Click Here

Kubera Poojai - 29.07.2015
To view the photos: Click Here

Joint Meeting - Perambalur & Ariyalur Nagarathar Sangam 08.08.2015
To view the photos: Click Here

67th Annual Day Competition - 20.09.2015
To view the photos: Click Here

67th Annual Day Function - 26.09.2015
To view the photos: Click Here

67th General Body Function - 04.10.2015
To view the photos: Click Here 









Videos

Pillaiyar Nonbu Carnival 27.12.2014
To view the video click the link below
Part 1
Part 2

Vayalur Paadhayathirai 15.02.2015
To view the video click the link below
Part 1
Part 2 

Wednesday 7 October 2015

67th General Body Meeting - 04.10.2015

04/10/2015 அன்று முகூர்த்தம் திருமண மண்டபத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறத்து. தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். செயலர் சென்ற ஆண்டு அறிக்கையை வாசித்து பொதுகுழுவில் ஒப்புதல் பெறப்பெற்றது. 2014-2015க்கான தணிக்கை செய்யப்பெற்ற கணக்குகளை பொருளாளர் சமர்பிக்க பொதுகுழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

01/04/2014 முதல் 31/03/2015 வரை உள்ள ஆண்டுக்கான தணிக்கையாளராக, ஆடிட்டர் திரு AR.கருப்பஞ்செட்டியார் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பெற்றார்கள்.

நமது சங்க விதிகள் சங்கம் துவங்கிய 1948-ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தற்சமயம் நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க முன்னாள் தலைவர் திரு M.அடைக்கலவன், திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு K.R.L.ராமநாதன், திரு S.சண்முகம் & திரு TR.சுப்பையா அடங்கிய குழு அமைக்கப்பெற்று 01.10.2015 செயற்குழுவில் விவாதிக்கப்பெற்று 04.10.2015 பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று அன்று முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்திருந்தது.

அதன்படி சட்ட விதிகள் மற்றும் உபவிதிகளின் குழுத் தலைவர், திரு. M. அடைக்கலவன் அவர்கள் நமது சங்கத்தின் சட்ட விதிகள்  & உபவிதிகளில் திருத்த செய்யவேண்டிய விதிகளையும், புதிதாக சேர்க்க வேண்டிய
விதிகளையும், பொதுக்குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிந்து சமர்ப்பித்தார். இந்த திருத்தங்கள் அனைத்தும் செயற்குழுவில் முறையாக விவாதிக்கப்பெற்றது. மேற்படி விவாதத்தில் திரு. சபா.சுப்ரமணியம், திரு.S.கதிரேசன்(ஏலதாரர்), திரு ஸ்டர்லிங் சிவலிங்கம், முன்னாள் தலைவர் திரு M.செல்லப்பன், முன்னாள் தலைவர் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு TR.சுப்பையா, பேராசிரியர் திரு M.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைக் கூறினார்கள். மேற்குறித்த விவாதத்திற்கு பிறகு, சட்ட விதிகள் & உபவிதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பெற்ற அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்வதென, ஏகமனதாக தீர்மானிக்கப்பெற்றது.

சட்ட விதிகள் & உபவிதிகளை திருத்தம் செய்வதற்கு சீறிய முயற்சியை மேற்கொண்ட குழுவின் தலைவரும் சங்கத்தின் முன்னாள்
தலைவருமான திரு M.அடைக்கலவன், குழுவின் உபதலைவரும் முன்னாள் தலைவருமான திரு VE.AL.சின்ன அழகப்பன், குழுவின் உறுப்பினர்கள் திரு KR.L.ராமனாதன், திரு S.சண்முகம் & திரு TR.சுப்பையா ஆகியோர் அனைவருக்கும் பொதுக்குழுவின் சார்பில் சங்கத்தின் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்கள்.

பின் சிறப்பு விருந்தினர், திரு. பெரியண்ணன் அவர்கள்  "லாபகரமான முதலீடு " பற்றி நகரத்தார் பெருமக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அடுத்ததாக சேலம்திரு
சேது மீனாள் ஆச்சி அவர்களின் "சுற்றுசூழல் நிர்வாகம்" பற்றியும், சேலத்தில் அவர்கள் நடைமுறைபடுத்திய செயல்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டினார்கள். பின் திருச்சி I.M.A தலைவர் Dr.S.சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு வழங்கப்பெற்று நகரத்தார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக செய்து தருவதாக டாக்டர் வாக்குறுதி அளித்தார்கள். பின் வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் கேள்விகளில் சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்றன. சிறப்பாக விழாத்தொகுப்பு செய்த திரு T.முத்துமாணிக்கம் மற்றும் திரு சோமசுந்தரம் அவர்கள் பாராட்டப்பெற்றார்கள்.

பின் 2015-2017 ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு செய்ய விருப்பமுள்ள உறுப்பினர்களிடம் வேட்பு மனுப்பெற்று தேர்தலை நடத்தித் தர தேர்வுக் குழுத் தலைவராக திரு M.அடைக்கலவன், உறுப்பினர்கள் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு TR.சுப்பையா, திரு K.RL.ராமநாதன் மற்றும் திரு S.சண்முகம் செட்டியார் ஆகியோர்களை சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் நியமித்தார்கள்.

நமது சங்க சட்ட விதிகளின் படி சங்கத்தின் நிர்வாக குழுவிற்கு

                                 ஒரு தலைவர் 
                                 ஒரு துணைத்தலைவர் 
                                 ஒரு செயலாளர் 
                                 ஒரு இணைச்செயலாளர் 
                                 ஒரு பொருளாளர் மற்றும் 

43 செயற்குழு உறுப்பினர்கள் (சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையின் படி 25 உறுப்பினர்களுக்கு ஒரு செயற்குழு உறுப்பினர் என்ற விகிதாசாரப்படி) ஆக மொத்தம் 48 பேர் செயற்குழுவிற்கு தேர்வு செய்யப் பெற வேண்டும் என, தேர்வுக் குழுத் தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்கள் கூறினார்கள்.

கீழ்க்கண்ட விபரப்படி முன்மொழியப் பெற்று வழிமொழியப்பெற்ற 48 உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை முறைப்படி தாக்கல் செய்தார்கள்.
                                              தலைவர் 

திரு M.ராஜேந்திரன்                  

துணைத்தலைவர் 

திரு C.மீனாட்சி சுந்தரம்

செயலாளர் 

திரு PR.முத்துக்குமார்

இணைச்செயலாளர் 

திரு RM.காசி

பொருளாளர் 

திரு V.கிருஷ்ணன்

செயற்குழு உறுப்பினர்கள் 

திரு SV.சுப்பையா, திரு SV.சாத்தப்பன், திருN. ஸ்ரீனிவாசன், திருRM.பழனியப்பன், திரு V.ராமசாமி, திரு KE.மெய்யப்பன், திரு S.கதிரேசன், திரு V.பழனியப்பன், திரு T.சேதுராமன்,  திரு K.முத்து,  திரு S.சண்முகம்,  திருS.S.வைரவன், திரு லெ.ராமநாதன், திரு KM.பழனியப்பன், திரு S.நடராஜன், திரு SP.சிதம்பரம், திரு AN.முத்துராமன், திரு RM.முத்துக்கருப்பன், திரு S.தியாகராஜன், திரு V.சண்முகம், திரு AR.S.சுப்பிரமணியன், திரு தென்னூர் S.கதிரேசன், திரு S.நாகப்பன், திரு SP.சுப்ரமணியன், திரு RM.முத்தையா, திரு M.செல்லப்பன், திரு M.RM.அழகப்பன், திரு M.லக்ஷ்மணன், திரு PL.அண்ணாமலை, திருS. அண்ணாமலை, திரு VR.பழனியப்பன், திரு M.சேதுராமன், திரு சித.பழனியப்பன், திரு ஆவி.காசிநாதன், திரு S.சுப்பையா, திரு SP.பழனியப்பன், திரு T.முத்துமாணிக்கம்.

மேற்கண்ட உறுப்பினர்களின் மனுக்களை பரிசிலித்து தேர்தல் குழு, அவையாவும் தகுதியானவை என்று தேர்தல் குழுத்தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்கள் கூறினார்கள். எனவே அவர்கள் அனைவரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பெற்றதாக தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அறிவித்தார்கள்.
         

சங்க விதிகளின்படி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் வாக்குரிமை பெற்ற நிரந்திர சிறப்பு அழைப்பாளர்களாக செயற்குழுவில் இருப்பார்கள் எனவும் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அறிவித்தார்கள்.

1. திரு L.N.லெட்சுமணன் செட்டியார்
2. திரு SP.அருணாசலம் செட்டியார்
3. திரு S.O.RM.கணபதி செட்டியார்
4. திரு M.செல்லப்பன் செட்டியார்
5. திரு RM.கிருஷ்ணன் செட்டியார்
6. திரு PL.A.சுப்பிரமணியன் செட்டியார்
7. திரு M.அடைக்கலவன் செட்டியார்
8. திரு AV.K.சொக்கலிங்கம் செட்டியார்
9. திரு S.N.S.RM.முத்தையா செட்டியார்
10. திரு R.திருநாவுக்கரசு செட்டியார்
11. திரு VE.AL.சின்ன அழகப்பன் செட்டியார்
12. திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம்

சிறப்பாக செயலாற்றிய தேர்வுக்குழுவின் தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்களையும், உறுப்பினர்கள் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு K.RL.ராமநாதன், திரு S.சண்முகம் மற்றும் திரு TR.சுப்பையா அவர்களையும் தலைவர் பாராட்டி சிறப்பித்தார்கள்.

செயற்குழுவில் குறிப்பிடும் வங்கிகளில் சங்கத்தின் பெயரில் புதிதாக கணக்குகள் திறக்கவும், ஏற்கனவே இருந்து வரும் கணக்குகளை முடிக்கவும், டெபாசிட் போடவும், செயற்குழுவின் அனுமதியுடன் திரும்ப பெறவும், வங்கி காசோலைகளில் கையெழுத்திட்டு பணம் பெறவும் பொருளாளர் திரு V.கிருஷ்ணன் உடன் தலைவர் திரு M.ராஜேந்திரன் அல்லது செயலாளர் திரு K.முத்துக்குமார் ஆகிய இருவரில் ஒருவர் இணைந்து கையெழுத்திட்டு வர பொதுக்குழு அனுமதி வழங்கியது.

புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பெற்று புதிய தலைவர், உபதலைவர், செயலாளர், இணைச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஏற்புரை அளித்தார்கள். வரக்கூடிய ஆண்டு சிறப்பாக அமைய உறுதி பூண்டார்கள்.

புதிய செயலாளர் திரு முத்துக்குமார் நன்றி கூற அனைவரும் இரவு விருந்துடன் கூட்டம் இனிதே ஒத்திவைக்கப்பெற்றது.


Monday 5 October 2015

Personality Development Programme - 03.10.2015

Career Counselling Programme மற்றும் So What? என்ற Life Skill Programme - ஐ தொடர்ந்து முத்தாய்ப்பாய் அக்டோபர் 3 சனிக்கிழமையன்று, திருச்சி அருகேயுள்ள ஆயிரமாண்டு தொன்மை வாய்ந்த தமிழனின் கட்டுமான தொழில்நுட்பத்தையும், நீர் மேலாண்மையையும்
உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் கல்லணையில் 'Raise the bar high' என்ற Personality Development Programme வெகு சிறப்பாக ஒரு நாள் பயிலரங்கமாக நடத்தப்பெற்றது.

அதை Prof.பஞ்சநாதன் அவர்கள் மிகச் சிறப்பாய் வடிவமைத்து நடத்திக்கொடுத்தார்கள். காலை 8.30 மணியளவில் ஒரு பேருந்தில் 8ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அதே ஆர்வத்தில் இருந்த சில பெற்றோர்களுமாய் புறப்பட்டனர். கல்லணை வந்து சேர்ந்தவுடன் அனைவருக்கும் பலகாரம் வழங்கப்பெற்றது.

எழில் கொஞ்சும் PWD விருந்தினர் மாளிகையில் உள்ள அரங்கத்தில் இந்த பயிலரகங்கம் நடத்தப்பட்டது.

அமைதியான சூழல், குளுமையான காற்று பசுமையான காட்சி என ஒரு மலைபிரதேசத்திற்கு வந்தது போன்ற உற்சாகம் ததும்பும் உணர்வுடன் மாணவர்களும் மற்றவர்களும் காணப்பட்டனர் .

முதல் பகுதியாக வந்திருந்த மாணவமணிகள் ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து கொள்ள ஏதுவாக  ice breaker விளையாட்டுகள் நடத்தப்பட்டது . பின்னர் 'Be a Super Singer' என்ற தலைப்பில் எந்த பண்புகள் ஒரு Super Singer ஐ Super Singer ஆக்குகிறது என்பது பற்றி கலந்தாய்வு மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டது .

மதிய உணவு சுமார் 100 பேருக்கு வழங்கபட்டது . மீண்டும் இரண்டாம் அமர்வில் உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றியும் பயிற்றுவிக்கப்பட்டது .

மாணவ மணிகளை தன் அனுபவத்தாலும், நகைசுவையாலும், விளையாட்டாய் கற்பிக்கும் முறையாலும் பேராசிரியர் பஞ்சநாதன் அவர்கள் காந்தத்தை போல் ஈர்த்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் சிறப்பாய் செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட
தலைவர் Classic S.ஆதப்பன் அவர்கள் தன் அனுபவத்தையும், கருத்துகளையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள செயலர் SV.சுப்பையா  நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு கல்லனையும் சுற்றிக் காண்பிக்கப்பட்டது. ஒரு கல்விச் சுற்றுலா வந்த திருப்தியோடு அனைவரும் மனநிறைவோடு ஊர் திரும்பினர்.

Wednesday 30 September 2015

67th Annual Day 26.09.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தின் 67ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் 'தாஜ் திருமண மண்டபத்தில் A/C' ல் 26.09.2015 சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.

முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாக குழுவினரின் ஆச்சிமார்கள் குத்துவிளக்கேற்ற விழா இனிதே தொடங்கியது.

சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து செயலர் திரு SV.சுப்பையா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்கள்.

IBCN 2015ஐ சிறப்புற நடத்தியமைக்காக NEU டீம் சார்பாக திரு PL.K.பழனியப்பன் அவர்கள் பாராட்டப்பெற்றார்கள். திரு PL.K.பழனியப்பன் அவர்கள் தம் உரையில் நம் சமூக இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டிய அவசியத்தை அழகுற எடுத்துரைத்தார்கள்.
அடுத்தபடியாக 'சாகித்ய' விருது பெற்ற குழந்தை கவிஞர் திரு செல்ல கணபதி அவர்கள் பாராட்டப்பெற்றார்கள். அதை தொடர்ந்து திரு செல்ல கணபதி அவர்கள் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து ESSVEE Foundation, திரு சிங்காரம் செட்டியார் அவர்கள் தம் சமூக சேவைக்காக பாராட்டப்பெற்றார்கள். அதைத் தொடர்ந்து
அவர்கள் பேசிய பொழுது தான் தொழிலில் முன்னேற சந்தித்த சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.

அதற்கடுத்து முக்கிய சிறப்பு விருந்தினர் விழா நாயகர் ஜஸ்டிஸ் திரு AR.லக்ஷ்மணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் சங்கத்திற்காக செய்திருக்கும் அரும்பணிகளை அடுக்கி, இவ்வளவு செயல்களை யாருமே இதுவரை செய்யவில்லை என்று பாராட்டி மகிழ்ந்தார்கள். மேலும் தம் மகன் வழக்கறிஞர் திரு AR.L.சந்தரேசன் அவர்கள் வசதியில்லாத நம்மினத்தவருக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராயிருப்பதாய் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்கள்.

இறுதியாக சிறப்பு பேச்சாளர் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் தன் அழகு தமிழில் எளிய நடையில் இனிமையாக இளைஞர்கள் மனதில் பதியும் வண்ணம் தன் கருத்துகளை பதிவு செய்தார்கள்.

அடுத்த நிகழ்வாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 8 மாணவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் காசோலை வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றனர். ஆண்டுக்கொரு முறை வழங்கப்பெறும் கல்வி உதவித்தொகை 102 பேருக்கு ரூ.2000/- வீதம் வழங்கப்பெற்றது. மேலும் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி செல்வி அபிராமிக்கு ரூ.10,000/- ம் உதவித்தொகை வழங்கப்பெற்றது.

முத்தாய்பாய் ஆண்டு விழா போட்டிகளில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், மாணவர்களுக்கும் அழகிய பயனுள்ள பரிசுகளை
சிறப்பு விருந்தினர்கள்வழங்கினார்கள்.

செட்டிநாடு சமையற் கலைஞர்களால் தயாரிக்கப்பெற்ற அறுசுவை இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழாவை தொகுத்து வழங்கிய திரு மேஜிக் சோமசுந்தரம், செல்வி சாத்தம்மை பிரியா மற்றும் விழா ஏற்பாடுகளை செய்திருந்த தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினரும், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள்.





Thanks Greeting


Thursday 24 September 2015

67th Annual Day Competitions 20.09.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தின் 67ம் ஆண்டு விழா போட்டிகள் செப்டம்பர் 20ம் தேதி ஞாயிறன்று சங்க கட்டிடத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக ஆன்மீக வினாடி வினா போட்டி நடைபெற்றது. முதல் சுற்று கேள்வித்தாள் கொடுக்கப்பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 5 பேரை தேர்ந்தெடுத்து நேரடி வாய்மொழி சுற்று நடத்தப்பெற்று வெற்றியாளர்கள் தெர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.

சிறுவர்களுக்கு 'ஒரு நிமிடம் உரையாடு' என்கிற பேச்சு போட்டி நடத்தப்பெற்றது.  இதில் சிறுவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பெற்று அதில் தவிர்க்க வேண்டிய சொல்லும் தரப்பெற்றது. சிறுவர்கள் 30 விநாடி அவகாசத்தில் தங்களை தயார் செய்து கொண்டு விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும். இந்த போட்டியை பார்த்த பிறகு தான் ஒரு நிமிடம் உரையாடுவது கூட எவ்வளவு சிரமம் என்று பார்வையாளர்கள் வியந்தனர்.

பின்னர் குழந்தைகளுக்கு Fun Games நடத்தப்பெற்றது. மதியம் அறுசுவை உணவு அனைவருக்கும் வழங்கப்பெற்றது. 'வண்ணமிகு வாழ்க்கை' என்ற
தலைப்பில் KIDS COLOURING போட்டி நடத்தப்பெற்றது. குழந்தைகள் மிக நேர்த்தியாக வண்ணம் தீட்டியதை பார்த்து நடுவர்கள் வியந்தனர்.

'ஜோடி பொருத்தம்' நிகழ்ச்சி தம்பதியருக்கு நடத்தப்பெற்றது. சுமார் 10 தம்பதியர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தம்பதியரிடம் தனித்தனியே கேட்டப்பெற்ற கேள்விகளுக்கு ஒத்த பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பெற்று சிறந்த ஜோடி தேர்ந்தெடுக்கப்பெற்றது.

மாணவர்களுக்கு கட்டுரை போட்டிக்கு முன்னரே தலைப்பு  கொடுக்கப்பெற்று கட்டுரையை தயாரித்து வந்து சமர்பிக்க சொல்லப்பெற்றிருந்தது. 'தூய்மை திருச்சி' - முதலிடம் பிடிப்பது எப்படி? என்ற தலைப்பில் மாணவர்கள் அற்புதமாய் கட்டுரைகளை சமர்பித்திருந்தனர். நடுவர்கள் தனித்தனியே மதிப்பிட்டதில் ஒரே மாதிரியான முடிவுகள் வந்தது தான் ஆச்சரியம்.

இறுதியாக மகளிருக்கான 'நடுவீட்டுக் கோலப் போட்டி'
நடத்தப்பெற்றது. மாக்கோலத்தில் தங்கள் புதுமையையும் நேர்த்தியையும் பெண்கள் வெயிலை பொருட்படுத்தாது சங்க மேல் தளத்தில் கோலம் போட்டு வெளிபடுத்தினர். அனைவருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்பெற்றது.

MODERN MUSICAL CHAIR என்ற வேடிக்கை விளையாட்டு நூதன முறையில்
அனைவரும் வயது வித்தியாசமின்றி பங்குபெற இனிதே நடந்தது. அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்றவர்கள் மொத்தம் 150 பேர் இருப்பர். பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரங்களை நடுவர்களாக பணியாற்றிய முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அறிவிக்க அனைவரும் மகிழ்ச்சியாய் விடைபெற்றனர். பரிசுகள் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் வழங்கப்பெறும் என அறிவிக்கப்பெற்றது.

இந்த ஆண்டு விழா போட்டிகளுக்கான ஏற்பாட்டை ஆண்டுவிழா போட்டிகள் குழுவைச் சார்ந்த திரு Magic சோமு, திரு Cosmo ராமநாதன், மணி கார்பரேஷன் திரு மணி மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Tuesday 11 August 2015

Joint Meeting - Perambalur & Ariyalur Nagarathar Sangam 08.08.2015

மன்மத வருடம் 23ம் தேதி 08.08.2015 சனிக்கிழமை சங்க வளாகத்தில் மாலை 6 மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் திரு ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களையும் வரவேற்றார்கள்.

செயலாளர் திரு SV.சுப்பையா சென்ற மாத அறிக்கையை வாசித்தப் பின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவு கணக்குகளை வாசித்தப் பின் அவையில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

அடுத்து வரும் 27ந் தேதி ஆண்டுவிழாவும், கல்வி உதவி விழாவையும் சேர்த்து வைப்பது என்று முடிவு எடுக்கப்பெற்றது.

அதற்கான போட்டிகளை செப்டம்பர் 20ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பெற்றது.

பொதுக்குழுவை அக்டோபர் மாதம் 3ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பெற்றது.

செயலாளர் நன்றி கூற கூட்டம் ஒத்தி வைக்கப்பெற்றது.

மாலை 7.00 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை முடிந்ததும் கார்த்திகைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் சங்க நிர்வாகிகள் அழைப்பை ஏற்று கூட்டுக் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தார்கள்.  அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பெற்றார்கள். பெரம்பலூர் மற்றும் அரியலூர் நகரத்தார் சங்க நிர்வாகிகளும், நமது சங்க நிர்வாகிகளையும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள். பெரம்பலூர் தலைவர் நமது கூட்டுத் திருமணம் ஒவ்வொன்றுக்கும் ரூ.5000/- நிதி கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் முடிந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.

Friday 31 July 2015

Kubera Poojai 29.07.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தில் 29.07.2015 அன்று குபேர பூஜை சென்னை, குபேரன்
கோவில் திரு கிருஷ்ணன் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்றது.  சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.  பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் குபேரர் படத்துடன் வேண்டியவர்களுக்கு நன்கொடைக் கட்டணத்துடன் வழங்கப்பெற்றது. பூஜையின் இடையிலும் முடிந்த பின்னும் செல்வி K.N.சுவாதி
மற்றும் செல்வி ஐஸ்வர்யா தங்கள் நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். இரவு விருந்து தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டால் சிறப்பாக செய்யப் பெற்றிருந்தது. குபேர பூஜைக்கான விழா ஏற்பாடுகளை முன்னாள் செயலாளர் திரு V.இராமசாமி, முன்னாள் பொருளாளர் திரு V.பழனியப்பன் அவர்களால் சிறப்பாக செய்யப்பெற்றிருந்தது.

Thursday 23 July 2015

Malaysia & Singapore Tour 15.07.2015 - 21.07.2015

மலேசியா, சிங்கப்பூர்  இரு நாடுகளையும் பார்த்து மகிழவும், நம் இன முன்னோர்கள் அந்நாட்டில் செய்த, செய்து வரும் நற்செய்திகள், தெய்வ வழிபாட்டிற்கென அமைத்துள்ள கோவில்கள், அந்நாடுகள் அடைந்துள்ள அறிவியல் பூர்வமான முன்னேற்றங்கள் அனைத்தையும் கண்டு களிக்கவும்,நினைவில் கொண்டு மகிழவும் திருச்சி நகரத்தார் சங்கத்தினர் 44 பேர் 15.7.15 முதல் 21.7.15 முடிய மலேசியா - சிங்கப்பூர் இனிய சுற்றுலா சென்று வந்தனர்.

15.7.15 அன்று இரவு 11.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து Malindo Airlines மூலம் கோலாலம்பூர் சென்றனர். 16.7.15 அன்று மலேசியா நேரம் காலை 5.25க்கு கோலாலம்பூர் விமான நிலையம் அடைந்தனர். பின் பயணக் களைப்பே தெரியாத வண்ணம் 'குளுகுளு' பேருந்தில் Putrajaya - வில் உள்ள புதிய மலேசியா பாராளுமன்றம், அரசு அலுவலகங்களை, Supreme Court கண்டு வியந்தனர். Putrajaya பாலத்தில் நின்று படங்கள் பல எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து கோலாலம்பூர் City Tour - Merdeka Square, Jamek Mosque, King's Palace, National Musuem, China Town, Petronas Twin Towers ('ரம்ஜான்' பெருவிழாக் காலமாதலால் உள்ளே செல்ல அனுமதி இல்லை) பார்த்தனர். பின் 'Perl International Hotel' ல் தங்கினர். விமான நிலையத்தில் இன்முகத்துடன் வரவேற்ற தமிழ் பேசும் மலேசியர் திருமிகு ரெட்டி அவர்கள் வழிகாட்டியாக கோலாலம்பூர் சுற்றுலா முழுவதும் எல்லாருக்கும் உதவி புரிந்தனர்.

16.7.15 மாலை KL Tower ன் Observatory Desk 127வது தளத்திற்கு மின் தூக்கி மூலம் சென்று மலேசியா முழுவதையும் கண்டு மகிழ்ந்தனர். இரவு Hotel சென்று தங்கினர்.

17.7.15 அன்று காலை எல்லாரும் அவரவர்கள் விருப்பப்படி அருகில் அமைந்திருந்த கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். பின் அருகில் இருந்த கோவில்களையும் தரிசித்தனர்.

பின் மலைப் பிரதேசமான Gentingற்கு Cable கார் மூலம் சென்று அங்கு அமைந்துள்ள 'Snow World' மற்றும் 'Casino' கண்டு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாய் பதிவு செய்து கொண்டனர்.

18.7.15 அன்று காலை கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்குச் சென்றனர். காலை உணவை முடித்த பின்னர் சிங்கப்பூர் City Tour மற்றும் சீனக் கோயில் கண்டு மகிழ்ந்தனர். பின் 'Singapore Flyer' ல் 40 நிமிடங்கள் இந்த உலகையே மறந்து வேறொரு உலகில் பயணம் செய்தனர். இந்த Flyerன் உச்சியிலிருந்து 'இந்தோனிஷியா' நாடு தெரிந்ததைப் பார்த்து மகிழ்ந்தனர். பின் 'Grand Imperial Hotel' ல் தங்கினர்.

19.7.15 அன்று காலை 'Singapore Zoo' கண்டு களித்தனர். Zoo முழுவதும் சுற்றி வரும் Tramல் பயணித்து எல்லா மிருகங்களையும் கண்டு களித்தனர். விதவிதமான மிருகங்களைப் பார்த்து பரவசமடைந்தனர். அன்று மாலை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான 'சென்டோசா' தீவுக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தைக் கண்டனர். பின் 'Madam Tussads' - மெழுகுச் சிலைக் கண்காட்சியில் மிகவும் தத்ரூபமாக உருவங்களை மெழுகில் உருவாக்கி இருந்த காட்சி கலையின் உச்சம்.  இந்தியாவின் காந்தியடிகள், ஷாருக்கான், ஐஸ்வர்யாராயின் சிலைகள் உண்மையில் அவர்கள்  போலவே இருப்பதைக் கண்டு மெய் மறந்து நின்றனர். பின் Cable car ride, Underwater Aquarium கண்ட பிறகு டால்பின்களின் செயல்திறன்கள் மிக்க Dolphin Show கண்டு களித்தனர். பின் Garden by the bay சென்றனர். உலகில் அத்தனை விதமான தாவரங்களும், பூக்களும் காண்பதற்கே மிகவும் ரம்மியமானதாக இருந்தது.

20.7.15 அன்று காலை உலகின் பல நாடுகளில் உள்ள 'Universal Studios' சென்று - Egyptian type, Newyork, Hollywood theme காட்சியமைப்புகளைக் கண்டு வியந்தனர். மிகச்சிறந்த ஹாலிவுட் படங்கள் தயாரான விதம், படமாக்கப்பட்ட இடங்களையும் கண்டு களித்தனர். அங்கிருந்து உலகின் மிகச் சிறந்த Fountain Dance - Wings of Time பார்த்து அதில் ஒரு துளியாகக் கரைந்தனர்.

21.7.15 அன்று பறவைகளின் உலகம் Jurong Bird Sanctuary சென்றனர். கிளிகளின் விளையாட்டுகள் பார்த்து, உருவத்தில் பெரிய சிறிய வண்ண வண்ணப் பஞ்சவர்ணக் கிளிகள் செய்து காட்டும் வித்தைகள் விந்தைகள் அனைத்தையும் கண்டுக் களித்து, Tramல் Bird Sanctuaryயை சுற்றிப் பார்த்துவிட்டு தங்குமிடத்திற்குத் திரும்பினர்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த அனைத்து நாட்களும், ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் உலகின் தலைச்சிறந்த shopping mall களில் ஒன்றான 'Mustafa Centre' ல் நம் ஆச்சிமார்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டார்கள்.

இத்தனை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் எல்லா நகரத்தார்களும் சிங்கபூரிலிருந்து Tiger Airlines மூலம் திருச்சி வந்தடைந்தனர். மலேசியா, சிங்கப்பூரில் கண்டு களித்த காட்சிகளின் பிம்பங்கள் இன்னமும் மனத்திரையில் அவர்கள் எடுத்த நிழற்படங்களாக நீங்காத நினைவுகளாய் நிலைத்திருக்கும்.




Monday 13 July 2015

Joint Meeting - Madurai Nagarathar Sangam 11.07.2015

மன்மத வருடம் ஆனி மாதம் 26ம் நாள் (11.07.2015) சனிக்கிழமையன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.

செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து பின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவுகளை வாசித்து கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

இந்த வருடமும் 29.07.2015 அன்று குபேர பூஜை நடத்தவும்
ஒப்புதல் பெறப்பெற்றது. தலைவர் அவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

இரவு உணவு அளிக்க செயற்குழு உறுப்பினர் கொப்பனாப்பட்டி திரு சிவலிங்கம் செட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  அவர்களின் குடும்பத்தார் கௌரவிக்கப்பெற்றார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் ஒத்தி வைக்கப்பெற்றது.

மாலை கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் கார்த்திகை கூட்டம் நடைபெற்றது.  ஆன்மீகமும் அறிவியலும் பற்றி செயற்குழு உறுப்பினர் திரு KRL.ராமநாதன் அவர்கள் உரையாற்றினார்கள்.

மதுரை நகரத்தார் சங்க தலைவர் அலவாக்கோட்டை திரு ஸ்ரீனிவாசன், உப
தலைவர், இளைஞர் அணி தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுக் கூட்டத்திற்கு நம் அழைப்பை ஏற்று வந்து சிறப்பு செய்தார்கள். அவர்கள் நம் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பெற்றார்கள்.  அவர்கள் தங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் முடிவுற்று அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.

Tuesday 30 June 2015

Life Skill Program - So What? 28.06.2015

உலகையே புரட்டிப் போட்ட கேள்விகளில்தான் நாகரிக வளர்ச்சிகளை நாம் கண்டிருக்கிறோம். அதன் பயன்களை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

28.06.2015 ஞாயிறன்று காலை 10 மணியளவில் திருமிகு 'பஞ்ச்' என்று அழைக்கப்படும் திரு பஞ்சநாதன் அவர்களால் நடத்தப்பெற்ற 'Life Skill Program'
மிகமிக ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டும் நிகழ்வாக விளங்கியது. தலைவர் திருமிகு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். பேராசிரியர் பஞ்சநாதன் அவர்களைப் பற்றிய அறிமுக உரையை நமது சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் திரு.இராமநாதன் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிதம்பரம் நகரத்தார் சங்கத்திலிருந்து வந்து கலந்து
கொண்ட 5 மாணவர்களையும் சேர்த்து 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடியப் பயின்று வரும் 40 மாணவ மனைவியர் கலந்து கொண்டனர்.  பெற்றோர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டமை மிகமிகப் பெருமைக்குரியது. LCD Projector யை பயன்படுத்தி 'Power Point Presentation' மூலம்
மிக நேர்த்தியாக பேராசிரியர் பஞ்சநாதன் அவர்கள் நம் சமூக மாணவர்களை அன்று முழுவதும் வேறொரு உலகில் சஞ்சரிக்கச் செய்தார்.

மந்திரச்சொல் எதுவும் அவரிடம் இல்லை. மனதில் வெளிவரும் எண்ணங்களை Why am I here?   Who am I?   SO WHAT? என்ற மூன்று கேள்விகளில்
அடக்கி, அதில் இருந்தே ஒவ்வொருவருக்குள்ளும்  இருக்கும் அளப்பரிய திறமைகளை ஒருங்கலந்து புதிய இலக்குகளை நோக்கி நம் விரல் பிடித்து அழைத்துச் சென்றார்.

Why am I here? என்ற முதல் கேள்வி உள் மனதின் ஆழத்தில் உள்ள குறிக்கோள்களை மேல் மட்டத்தில் கொணர்ந்து திட்டமிட்ட பாதைகளை தீர்மானிக்க உதவி புரியும்.
Who am I? என்ற இரண்டாவது கேள்வி, இந்தக் குறிக்கோளை நாம் அடைய, நாம் யார்? நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கும்.

SO WHAT? என்ற மூன்றாவது கேள்வி - நமக்குள்ளே உள்ள நம்பிக்கையின்மையை போக்கி, "அதனால் என்ன?" என்ற நம்பிக்கையையும், குறிக்கோளை அடைந்து விட்டது போன்ற ஆனந்தத்தையும் நமக்குள்ளே ஊற்றாகப் பெருக்கெடுத்து பொங்கி வழியச் செய்யும்.                                                      
பேராசியர் பஞ்சநாதன் அவர்கள் Power Point Presentation மூலம் நிகழ்த்திய வழிகாட்டல் உரைகள் வந்திருந்த அனைத்து இளைஞர்களுக்கும்  மட்டுமில்லாது அவர்களது பெற்றோர்களையும் சிந்திக்க வைத்தது. இது ஒரு புது அனுபவம் என்று கலந்து  கொண்ட அனைவரும் உணர்ந்தது தெரிய வந்தது. இத்தகைய 'விழிப்புணர்வுகளை' தூண்டியதன் மூலம் திருச்சி நகரத்தார் சங்கம் நம் சமூக இளைஞர்களுக்கும் ஒரு.
புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர்க்கும் Book Mark ,Note Pad ,Pen,ID Card வழங்கப் பெற்றது. மிகவும் வியக்கத்தக்க முறையில் பயிற்சியாளருடன் அறிவு  பூர்வமான, ஆக்கத்திறன்
மேம்பாட்டினை வெளிப்படுத்தி விளக்கங்களைப் பெற்ற சிதம்பரம் நகரத்தார் சங்கத்திலிருந்து வந்திருந்த செல்வி வள்ளியம்மைக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்  பெற்றது.                  
இத்தகு சிறப்பு வாய்ந்த 'விழிப்புணர்வுப் பயிற்றியை' அளித்த பேராசியர் பஞ்சநாதன்   அவர்களுக்கு பொன்னாடை மற்றும் சிறப்புப் பரிசு முன்னாள் தலைவர் திரு.AVK.சொக்கலிங்கம் அவர்கள் வழங்கினார்கள்.

மதியம் 1 மணியளவில் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன்,மதியம் அனைவருக்கும் விருந்தளிக்கப் பெற்றது.

இறுதியாக திருச்சி   நகரத்தார் சங்கம் செயலாளர் திருமிகு SV.சுப்பையா அவர்கள் நன்றி கூற,பயன்மிக்க  இந்த 'So What ?' நிகழ்வு இனிதே முடிவற்றது!      
நீங்களும் சிந்தியுங்கள்? 'So What?'
                                         


Tuesday 16 June 2015

Yoga Thina Vilippunarvu Kootam - 14.06.2015

மன்மத வருடம் வைகாசி மாதம்31ம் நாள் (14.06.2015)             ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6 மணி அளவில் திருச்சி சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கார்த்திகை கூட்டுபிராத்தனைக்குபின் கார்த்திகை கூட்டம் நடை பெற்றது.

யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றி பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வேந்தன்பட்டி டாக்டர் மே.சு.இளங்கோ அவர்கள்
வந்திருந்தார்கள். டாக்டர்.மே.சு.இளங்கோ அவர்களை முன்னாள் தலைவர் வேந்தன்பட்டி நாகப்பா லெட்சுமணன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.இருவரும் கௌரவிக்கப்பெற்றார்கள்.     டாக்டர் திரு.இளங்கோ அவர்கள் யோகாவின் சிறப்புகளை நன்றாக எடுத்துரைத்தார்கள்.  

இரவு உணவு செயற்குழு உறுப்பினர் திரு.TR.சுப்பையா அவர்களின் குடும்பத்தாரால் வழங்க பெற்றது. திரு. TR.சுப்பையா அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பெற்றார்கள்.   செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.     
                                                                                                                                               

                                                                

Thursday 21 May 2015

158th Kootu Thirumanam - 20.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் முன்னின்று நடத்திய 158-வது கூட்டுத் திருமணம் பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் 20.05.2015 புதன்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. மாப்பிள்ளை வலையப்பட்டி முருகேஷ் மற்றும் மணமகள்  கீழச்சீவல்பட்டி மீனாட்சி ஆகியோரின் திருமணம்
பெரியோர்கள், உறவினர்கள், சங்கத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இறுதியில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.  அதில் திருமணம் நடக்க உறுதுணையாக இருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிள்ளையார்பட்டி விடுதியையும் மற்றும் ஏற்பாடுகளையும் செய்து தந்த பிள்ளையார்பட்டி டிரஸ்ட்டியினைவருக்கும்
நன்றி தெரிவிக்கப்பெற்றது.  சங்க நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கீழச்சீவல்பட்டி சிங்காரம் ஹோட்டல் திரு சிங்காரம் செட்டியார் அவர்கள் நமது மாணவ, மாணவியரின் திறன் வளர்ப்புக்கு (Skills Development)​ உதவி செய்வதாகவும் அதற்காக சென்னையில் தமது நிர்வாகத்தில் ஒரு Community College நடத்துவதாகவும் தெரிவித்தார்கள்.  கீழச்சீவல்பட்டி SV.சிங்காரம் அவர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். திருமணத்தில் முதல் நாள் இரவு 100 பேர், மறுநாள் திருமணத்தன்று காலை 300 பேர், மதியம் 300 பேர் கலந்து  கொண்டனர். விருந்து ஏற்பாடுகளை புதுக்கோட்டை கோடீஸ்வரா கேட்டரிங் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tuesday 19 May 2015

Joint Meeting - Chidambaram Nagarathar Sangam 18.05.2015

18.05.2015 மாலை 6.30 மணியளவில் செயற்குழு உறுப்பினர்கள் 23 பேர் கலந்து கொள்ள செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இரவு கார்த்திகை கூட்டம் கூட்டு வழிப்பாட்டுடன் தொடங்கியது. புதியதாக அச்சிடப்பட்ட கூட்டு வழிபாட்டு புத்தகத்துடன்
வழிபாடு நடத்தப்பட்டு 7.00மணிக்கு கூட்டம் தொடங்கியது. சிதம்பரம் நகரத்தார் சுமார் 13 பேர் கலந்து கொண்டு கூட்டுக் கூட்டமாக நடைபெற்றது.  அன்றைய கூட்டத்தில் சிதம்பரம் நகரத்தார் சங்கத் தலைவர் திரு விசு.பழனியப்பன் அவர்கள்
உரையாற்றினார்கள். அறிவியலும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் சங்க உறுப்பினர் குழிபிறை திரு S.பொன்னப்பன் அவர்கள் சிறப்பாக பேசினார்கள். அன்றைய இரவு விருந்து நண்பர்கள் குழுவினர் சார்பாக வழங்க்கப்பெற்றது.

Monday 18 May 2015

Palani Kattalai Abishegam - 15.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் சார்பாக பழனி மலையில் சங்க கட்டளை அபிஷேகம் 15.05.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.  அதில் நம்மவர்கள் 33 பேர் கலந்து கொண்டார்கள். காலையில் டிபன் பழனி நகரத்தார் சங்கம் சார்பாக இராக்கால மடத்தில் வைத்து கொடுக்கப்பெற்றது.  சங்கத்தின் சார்பாக அன்னதானமும் அன்னதானக் கூடத்தில் அன்றைய தினம் வழங்கப்பெற்றது. பழனியில் அனைவருக்கும் சிறப்பானதொரு தரிசனம் கிடைத்தது. மதியம் மலையில் தேவகோட்டை தண்ணீர் பந்தலில் வைத்து சாப்பாடு வழங்கப்பெற்றது. சிறிது ஓய்வுக்குப்பின் தாடிக் கொம்பு (திண்டுக்கல்) பெருமாள் கோவில் தரிசனம் செய்து டிபனை முடித்துக்கொண்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேர்த்தார்கள்.