Monday 18 May 2015

Palani Kattalai Abishegam - 15.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் சார்பாக பழனி மலையில் சங்க கட்டளை அபிஷேகம் 15.05.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.  அதில் நம்மவர்கள் 33 பேர் கலந்து கொண்டார்கள். காலையில் டிபன் பழனி நகரத்தார் சங்கம் சார்பாக இராக்கால மடத்தில் வைத்து கொடுக்கப்பெற்றது.  சங்கத்தின் சார்பாக அன்னதானமும் அன்னதானக் கூடத்தில் அன்றைய தினம் வழங்கப்பெற்றது. பழனியில் அனைவருக்கும் சிறப்பானதொரு தரிசனம் கிடைத்தது. மதியம் மலையில் தேவகோட்டை தண்ணீர் பந்தலில் வைத்து சாப்பாடு வழங்கப்பெற்றது. சிறிது ஓய்வுக்குப்பின் தாடிக் கொம்பு (திண்டுக்கல்) பெருமாள் கோவில் தரிசனம் செய்து டிபனை முடித்துக்கொண்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேர்த்தார்கள்.

No comments:

Post a Comment