Tuesday 11 August 2015

Joint Meeting - Perambalur & Ariyalur Nagarathar Sangam 08.08.2015

மன்மத வருடம் 23ம் தேதி 08.08.2015 சனிக்கிழமை சங்க வளாகத்தில் மாலை 6 மணியளவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் திரு ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களையும் வரவேற்றார்கள்.

செயலாளர் திரு SV.சுப்பையா சென்ற மாத அறிக்கையை வாசித்தப் பின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவு கணக்குகளை வாசித்தப் பின் அவையில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

அடுத்து வரும் 27ந் தேதி ஆண்டுவிழாவும், கல்வி உதவி விழாவையும் சேர்த்து வைப்பது என்று முடிவு எடுக்கப்பெற்றது.

அதற்கான போட்டிகளை செப்டம்பர் 20ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பெற்றது.

பொதுக்குழுவை அக்டோபர் மாதம் 3ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பெற்றது.

செயலாளர் நன்றி கூற கூட்டம் ஒத்தி வைக்கப்பெற்றது.

மாலை 7.00 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை முடிந்ததும் கார்த்திகைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் சங்க நிர்வாகிகள் அழைப்பை ஏற்று கூட்டுக் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தார்கள்.  அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பெற்றார்கள். பெரம்பலூர் மற்றும் அரியலூர் நகரத்தார் சங்க நிர்வாகிகளும், நமது சங்க நிர்வாகிகளையும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள். பெரம்பலூர் தலைவர் நமது கூட்டுத் திருமணம் ஒவ்வொன்றுக்கும் ரூ.5000/- நிதி கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் முடிந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.