Monday 28 October 2013

President's Dinner


திருச்சி நகரத்தார் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கிளாசிக் திரு ஆதப்பன் சுந்தரம்  அவர்கள், அனைவரும் ஒன்று கூடி மகிழும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இந்நிகழ்ச்சி 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் மாலை 6.00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைவர் ஆதப்பன் சுந்தரம் குடும்பத்தினர் மற்றும் திருச்சி நகரத்தார் சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர்.  விழாவிற்கு இலக்கியச் சிந்தனை பா.லெட்சுமணன் அவர்கள் தலைமை தாங்கி ஆதப்பன் சுந்தரம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து திருச்சி நகரத்தார் சங்க முன்னாள் தலைவர்களும் பிற ஊர் நகரத்தார் சங்கப் பிரதிநிதிகளும் வாழ்த்திப் பேசினார்கள்.  தேவகோட்டை இராமநாதன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அனைத்து ஊர் நகரத்தார் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் திருச்சி நகரத்தார் சங்க முன்னாள்  தலைவர்களுக்கும் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் சார்பில் பொன்னாடைகள் அணிவிப்பு சிறப்பாக நடைபெற்றது.  திருச்சிவாழ் நகரத்தார்களும் குறிப்பாக சிறுகூடல்பட்டி நகரத்தார்கள் மற்றும் மாத்துர் கோவில் சார்பிலும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து 
வாழ்த்தினார்கள்.  வந்திருந்த அனைவருக்கும் தலைவர் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் சார்பாக சிறந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.