Thursday 21 May 2015

158th Kootu Thirumanam - 20.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் முன்னின்று நடத்திய 158-வது கூட்டுத் திருமணம் பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் 20.05.2015 புதன்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. மாப்பிள்ளை வலையப்பட்டி முருகேஷ் மற்றும் மணமகள்  கீழச்சீவல்பட்டி மீனாட்சி ஆகியோரின் திருமணம்
பெரியோர்கள், உறவினர்கள், சங்கத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இறுதியில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.  அதில் திருமணம் நடக்க உறுதுணையாக இருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிள்ளையார்பட்டி விடுதியையும் மற்றும் ஏற்பாடுகளையும் செய்து தந்த பிள்ளையார்பட்டி டிரஸ்ட்டியினைவருக்கும்
நன்றி தெரிவிக்கப்பெற்றது.  சங்க நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கீழச்சீவல்பட்டி சிங்காரம் ஹோட்டல் திரு சிங்காரம் செட்டியார் அவர்கள் நமது மாணவ, மாணவியரின் திறன் வளர்ப்புக்கு (Skills Development)​ உதவி செய்வதாகவும் அதற்காக சென்னையில் தமது நிர்வாகத்தில் ஒரு Community College நடத்துவதாகவும் தெரிவித்தார்கள்.  கீழச்சீவல்பட்டி SV.சிங்காரம் அவர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். திருமணத்தில் முதல் நாள் இரவு 100 பேர், மறுநாள் திருமணத்தன்று காலை 300 பேர், மதியம் 300 பேர் கலந்து  கொண்டனர். விருந்து ஏற்பாடுகளை புதுக்கோட்டை கோடீஸ்வரா கேட்டரிங் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment