Tuesday 16 June 2015

Yoga Thina Vilippunarvu Kootam - 14.06.2015

மன்மத வருடம் வைகாசி மாதம்31ம் நாள் (14.06.2015)             ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6 மணி அளவில் திருச்சி சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கார்த்திகை கூட்டுபிராத்தனைக்குபின் கார்த்திகை கூட்டம் நடை பெற்றது.

யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றி பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வேந்தன்பட்டி டாக்டர் மே.சு.இளங்கோ அவர்கள்
வந்திருந்தார்கள். டாக்டர்.மே.சு.இளங்கோ அவர்களை முன்னாள் தலைவர் வேந்தன்பட்டி நாகப்பா லெட்சுமணன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.இருவரும் கௌரவிக்கப்பெற்றார்கள்.     டாக்டர் திரு.இளங்கோ அவர்கள் யோகாவின் சிறப்புகளை நன்றாக எடுத்துரைத்தார்கள்.  

இரவு உணவு செயற்குழு உறுப்பினர் திரு.TR.சுப்பையா அவர்களின் குடும்பத்தாரால் வழங்க பெற்றது. திரு. TR.சுப்பையா அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பெற்றார்கள்.   செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.     
                                                                                                                                               

                                                                

No comments:

Post a Comment