Monday 13 July 2015

Joint Meeting - Madurai Nagarathar Sangam 11.07.2015

மன்மத வருடம் ஆனி மாதம் 26ம் நாள் (11.07.2015) சனிக்கிழமையன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.

செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து பின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவுகளை வாசித்து கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

இந்த வருடமும் 29.07.2015 அன்று குபேர பூஜை நடத்தவும்
ஒப்புதல் பெறப்பெற்றது. தலைவர் அவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

இரவு உணவு அளிக்க செயற்குழு உறுப்பினர் கொப்பனாப்பட்டி திரு சிவலிங்கம் செட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  அவர்களின் குடும்பத்தார் கௌரவிக்கப்பெற்றார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் ஒத்தி வைக்கப்பெற்றது.

மாலை கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் கார்த்திகை கூட்டம் நடைபெற்றது.  ஆன்மீகமும் அறிவியலும் பற்றி செயற்குழு உறுப்பினர் திரு KRL.ராமநாதன் அவர்கள் உரையாற்றினார்கள்.

மதுரை நகரத்தார் சங்க தலைவர் அலவாக்கோட்டை திரு ஸ்ரீனிவாசன், உப
தலைவர், இளைஞர் அணி தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுக் கூட்டத்திற்கு நம் அழைப்பை ஏற்று வந்து சிறப்பு செய்தார்கள். அவர்கள் நம் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பெற்றார்கள்.  அவர்கள் தங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் முடிவுற்று அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.

No comments:

Post a Comment