Monday 6 April 2015

Yoga & Meditation Workshop 28.03.2015 - 05.04.2015

உலக நாடுகள் அனைத்தும் நம்மை வெகுவாக மதித்து நோக்கும் பல பெருமைகளில் ஒன்று தான் சித்தர்களும் யோகிகளும் நமக்களித்த நன்கொடையான 'யோகவும்' 'தியானமும்'. நம் சமூக மக்களின் நடைமுறை வாழ்க்கையின் இன்றியமையாப் பயிற்சிகளாக மாற்றிட வேண்டி எடுத்த முயிற்சிதான் 'யோகா' மற்றும் 'தியானப்பயிற்சி' வகுப்புகள்.
இப்பபயிற்சிகளை ஆர்வமுடன் நமக்கு பயன்படும் வகையில், வகுப்புகளை நடத்திட முன்வந்தவர் நம் சமூகத்தை சார்ந்த மதிப்பிற்குரிய திருமதி
சிந்தாமணி அண்ணாமலை அவர்கள். அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வசித்தபோது அங்கேயும் 'யோகா', 'தியான' பயிற்சி வகுப்புகளை நடத்தி புகழ்பெற்ற பெருமதிப்பிற்குரிய பெருந்தகை அவர்கள். 28.03.2015 முதல் 05.04.2015 வரை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை நடந்த இந்தப் பயிற்சி வகுப்புகளில் நம் சமூக ஆச்சிமார்கள் 30 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இவ்வகுப்புகளை மிக அமைதியாகவும், மிகவும் பொறுமையுடனும் எல்லா யோகாப்பயிற்சிகளையும் எல்லோரும் முழுவதும் புரிந்துக்கொள்ளும்படி செயல்முறையாக செய்துக்காட்டியும், எல்லா ஆச்சிமார்களும் வீட்டில் சென்றவுடன் யாருடைய துணையும் இன்றி  பயிற்சிகளை செய்திடும் அளவுக்கு அவர்களுக்கு பயிற்சிகளை கட்டம் கட்டமாக முறையுடன்
பயிற்றுவித்த பாங்கு திருமதி சிந்தாமணி அண்ணாமலை அவர்களுக்கு உரித்தான சிறப்பான பாங்கு.
அவர்களின் பணி தொடரட்டும் என வாழ்த்துவதுடன், அவர்களின் சீரிய பணிக்கும் பயிற்சிக்கும் மனமார வாழ்த்துகளையும் நன்றிகளையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment