Monday 6 April 2015

Valmiki Ramayanam Navaham Ubanyasam 28.03.2015 - 05.04.2015

பாரத நாடு பழம் பெரு நாடு; நாமனைவரும் பெருமை கொள்ளும் நம் கலாச்சார மரபுகள் சணதன காலம் முதல் இன்று வரையும், இன்னும் யுக யுகங்களையும் கடந்து தொடர உள்ளது. தொன்மைச் சிறப்பினை காலம் காலமாய் காத்து வரும் பண்பும் இயற்கையாகவே இம்மண்ணில் கலந்துள்ளது. அத்தகைய சிறப்பையும் பெருமையையும் நம்மக்களுக்கு வழிக்காட்டிச் செல்லும், கலங்கரை விளக்கமாய் நமக்குள்ள விலைமதிப்பில்லா பொக்கிஷங்களாக வரும் பாரத இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும். வாழ்க்கை முறைகளை செப்பனிடும் நீதி நூல்கள் இவை. இந்து மதத்தின் சாரமாய் நின்று விளங்கும் இந்த இதிகாசங்களில் 'ராம காவியம்' இராமபிரானின் வாழ்வையே ஒரு பாட நூலில் இயம்பியது 'இராமாயணம்'. இதைப் பற்றிய சிறப்புகளை நம் சமூக மக்கள்
பக்தியுடன் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்திட நினைத்து திருச்சி நகரத்தார் சங்கம் "வால்மீகி இராமாயணம் நவாஹம் உபந்யாஸம்" நடத்திடத் தீர்மானித்தது. நம் சங்க முன்னாள் தலைவர் மதகுபட்டி திரு திருநாவுக்கரசு செட்டியார் அவர்களின் சீரிய முயற்சியால் பெருமைமிகு திப்பிராஜபுரம் மோஹன் ராம் தீட்சிதர் மற்றும் அவரது மூத்த சகோதரர் பெருமைமிகு பட்டாபிராம தீட்சிதர் இருவராலும் "வால்மீகி இராமாயணம் நவாஹம் உபந்யாஸம்" 28.03.2015 முதல் 05.04.2015 முடிய நாள்தோறும் நம் சங்கக்கட்டிடத்தில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

28.03.2015 அன்று 'வால்மீகி இராமாயணம்' தொடங்கிய வரலாறு முதல் 'இராமபிரான் ஜனனம்' வரையிலான உபந்யாஸம் நடைப்பெற்றது . அன்று இரவு உணவு விருந்துபசாரம் காரைக்குடி திரு N.முருகப்பன் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) வழங்கினார்கள்.

29.03.2015 அன்று "ஸீதா கல்யாணம்' வரையிலான
சம்பவத்துடன் உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்றைய இரவு விருந்து அரிமளம் திருமதி சிந்தாமணி ஆச்சி குடும்பத்தினர் அளித்தார்கள்.

30.03.15 அன்று இராமாயணத்தின் சூச்சும முடிச்சான 'கைகேயி வரதானம்' வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்று குழிப்பிறை டாக்டர் A.முத்துராம் குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்தளித்தார்கள் .

31.03.2015 அன்று 'சித்ரகூட கமனம்' வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. குழிப்பிறை திரு S.பொன்னப்பன்  குடும்பத்தினர் அன்றைய இரவு விருந்தினை அளித்தார்கள்.

01.04.2015 பாரத்தின் பெருமையையும் சகோதர வாஞ்சை, நீதி நெறி வாழ்க்கையின் சாரம்சமான 'பாதுகா   பட்டாபிசேஷகம்' வரையிலான 
நிகழ்ச்சிகளின் தொகுப்பு உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்று இரவு உணவு விருந்துபசாரம் பாகனேரி திரு V.தியாகராஜன் குடும்பத்தினர், ஸ்ரீ அபிராமி ஸ்டீல்ஸ் அவர்கள் வழங்கினார்கள் .

02.04.2015 அன்று 'சபரி மோட்சம்' வரையிலான நிகழ்வுகளின் தொகுப்புகள்  உபந்யாஸம் நடைப்பெற்றது. அன்றைய இரவு விருந்து முன்னாள் தலைவர் மதகுபட்டி திரு R.திருநாவுக்கரசு அவர்களின் புதல்வர் திரு T.விஸ்வநாதன்  குடும்பத்தினர் அளித்தார்கள்.

03.04.2015 அன்று 'அங்குளியக தானம்' வரையிலான சம்பவங்கள் உபந்யாஸத்தில் இடம் பெற்றன. அன்றிரவு தேவக்கோட்டை திரு VA .முத்து குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) மற்றும் விரையாச்சிலை திரு CT.சம்பந்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்தளிதார்கள் .

04.04.2015 'ஹநுமத்ராவண ஸம்வாதம்' நிகழ்வு வரையிலான உபந்யாஸம் நடைப்பெற்றது. காரைக்குடி திரு RM.கிருஷ்ணன் குடும்பத்தினர் (முன்னாள் தலைவர்) அன்றைய இரவு விருந்தினை அளித்தார்கள்.

05.04.2015 அன்று 'விபிஷணசரணாகதி' மற்றும் 'இராமர் பட்டாபிஷத்துடனும்' உபந்யாஸம் இனிதே முடிவுற்றது. 9 நாளும் பூஜைக்கான மலர்களை P. புதுப்பட்டி திரு SP. சுவாமிநாதன் அவர்கள்  அளித்தார்கள்.

உபந்யாஸம் நடைப்பெற்ற இந்த 9 நாட்களிலும் நம் சமூக மக்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பக்திக் கடலில் கரைந்து மகிழ்வும் மனநிறைவும் அடைந்துள்ளனர்  என்பது கண்கூடாகக் கண்ட நிகழ்வு. பட்டாபிசேஷகம் நாளன்று 350 நகரத்தார்கள் கலந்து கொள்ள, நகரத்தார் சங்க உறுப்பினர்கள் நோட்டுப்புத்தகங்கள், பேனா, இனிப்புவகைகள், புத்தகங்கள், ஸ்லோக அட்டைகள் யாவும் நம் சமூக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். அன்று இரவு உணவு விருந்தை கண்டரமாணிக்கம் திரு S.சுந்தரம் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) வழங்கினார்கள். வந்திருந்தவர்களுக்கு வேந்தன்பட்டி திரு V.பழனியப்பன் குடும்பத்தினர் (செயற்குழு உறுப்பினர்) Ice cream வழங்கி சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment