Thursday 30 April 2015

Thiruchendhur Tour - 26.04.2015 - 28.04.2015

ஏப்ரல் மாதம் 26,27,28-ம் தேதிகளில் 86 நகரத்தார் கலந்து கொள்ள திருச்செந்தூர் சுற்றுலா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.  25ம் தேதி இரவு 11 மணிக்கு 2 பேருந்துகளில் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.  திருச்செந்தூரில் 26ம் தேதி காலை 5.00 மணிக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.  அனைவரும் முருகனின் அருள் பெற்று மகிழ்ந்தனர்.  பின் வனதிருப்பதி, மணப்பாடு சர்ச், உவரி சிவன் கோவில், சுசீந்திரம் ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு இரவு கன்னியாகுமரியில் தங்கினார்கள்.  27ம் தேதி காலை கன்னியாகுமரி அம்மன் கோவில், விவேகானந்தர் பாறை பார்த்துவிட்டு மாலை திருப்பரப்பு நீர் வீழ்ச்சியில் ஆனந்தமாய் குளித்தார்கள்.  பின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பார்த்துவிட்டு இரவு திருவனந்தபுரத்தில் தங்கினார்கள்.  மறுநாள் பலவங்காடி பிள்ளையார், அனந்தன் காடு, பத்மநாப சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, ஆற்றுக்கால் பகவதி, முக்கோலக்கல் பகவதி, கோவளம் பீச் பார்த்த பின் மாலை திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் கோவில் தரிசனம் முடித்து திருச்சி வந்து சேர்ந்தனர்.  இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்குழு உறுப்பினர் திரு KRL.இராமநாதன் மற்றும் MRM.அழகப்பன் அவர்கள் மிகச் சிறப்பாக சுற்றுலாவை நடத்தித் தந்தனர்.

No comments:

Post a Comment