Sunday 17 August 2014

1st Nagarathar Chess Festival




 திருச்சி நகரத்தார் சங்கம் ஆகஸ்ட் 15,16 ல் முதன் முதலாக நம் நகரத்தார் பிள்ளைகள் மட்டும் பங்கேற்கக்கூடிய முதல் நகரத்தார் செஸ் திருவிழாவை மிக சிறப்பாக திருச்சி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தினார்கள்.

இந்த செஸ் போட்டி U-9, U-12, U-15 என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது.  இந்த செஸ் திருவிழாவிற்கான அழைப்பிதழ்கள் அனைத்து
நகரத்தார் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் நம் சமூக மாத
சமூக இதழ்களிலும் அறிவிக்கப்பட்டது.  சுமார் இருபதாயிரம் நகரத்தார்களின் கைபேசிகளுக்கு SMS மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த செஸ் போட்டிகளில் சுமார் 120 நகரத்தார் பிள்ளைகள் பங்கு கொண்டனர்.

“உயர்ந்த இடத்தை பிடிப்பது தலைமையல்ல, பிடித்த இடத்தை உயர்த்துவது தான் தலைமை என்று உணர்த்தி வரும் தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் போட்டிகளை துவக்கி, Chief Arbiter  மேலைசிவபுரி PL.பழனியப்பன் (காசி) அவர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.
இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo இராமனாதன் மற்றும் Dr.SP.திருப்பதி இணைந்து உருவாக்கியிருந்த செஸ் விளையாட்டின் பயன்பாட்டுகளை பற்றிய ஆடியோ விஷ்வல் திரையிடப்பட்டது.  பார்வையாளர்கள் விரும்பி கேட்டதின் பேரில் அனைவருக்கும் மேற்படி குருந்தகடு வழங்கப்பட்டது.

போட்டிகளில் கலந்து கொள்ள வந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் காத்துக்கொண்டிருக்கும் போது அவர்களையும் உற்சாகப்படுத்த பல
நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. இரண்டு  நாளும் செட்டிநாட்டு சமையல் கலைஞர்கள் கொண்டு சிறப்பான உணவு படைக்கப்பட்டது.

இப்போட்டிகள் 6 சுற்றாக விறுவிறுப்பாய் நடந்தது.  எல்லா நகரங்களிலிருந்தும், ஏன் அமெரிக்காவிலிருந்தும் கூட போட்டியாளர்கள்
வந்து கலந்து கொண்டது சிறப்பு.

நிகழ்ச்சி நிறைவு நாள் பரிசளிப்பு விழாவில் ‘ஆச்சி வந்தாச்சு திரு பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு செஸ் விளையாட்டின் சிறப்புகளை பற்றி
பேசினார்கள்.  மேலும் தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அடுத்த செஸ் திருவிழாவை மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடத்துவதாக உறுதியளித்தார்கள்.

    இவ்விழாவில் செஸ் விளையாட்டில் உலக அரங்கில் பெரும்
பேரும் புகழும் பெற்றுள்ள செல்வன்
N.ராம் அரவிந்த் (திருச்சி நகரத்தார்
சங்க முன்னாள் தலைவர் நாகப்பா லெட்சுமணன் அவர்கள் பேரன்) கௌரவிக்கப்பட்டார்.  அவரின் தந்தை திரு நாகப்பன் அவர்களும் தாயார் திருமதி
முத்து அவர்களும், செஸ் போட்டியாளர்களும் பெற்றோர்களும் செஸ் பற்றி கேட்ட சந்தேங்களுக்கு பதில் அளித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தென்னூர் திரு S.கதிரேசன், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo இராமனாதன் மற்றும் Dr.SP.திருப்பதி,
உணவு ஏற்பாடுகளை கவனித்த இணைச்செயலாளர் திரு நித்தியகல்யாணி சீனிவாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பரிசளிப்பு விழாவை அழகு தமிழில் செவன்த் சென்ஸ் திரு சோமசுந்தரம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.



No comments:

Post a Comment