Friday 8 August 2014

Executive Committee Meeting

குளு குளு குற்றாலத்தில் 
திருச்சி நகரத்தார் சங்க செயற்குழு  கூட்டம்

"சில்லென்ற தென்றல்: சிதறி விழும் சாரல் 
மனதில் சிறகடிக்கும் நான் மாடக்கூடல்"

இத்தகைய சிறப்பு வாய்ந்த குற்றாலத்தில் கடந்த 06.08.2014 மற்றும் 07.08.2014 தேதிகளில் திரு வி.கே.என் அவர்களின் விருந்தினர் மாளிகையில் திருச்சி நகரத்தார் சங்க செயற்குழு கூட்டம், தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 05.08.2014 இரவு சுமார் 11 மணி அளவில் திருச்சி PL.A.ரெத்னா ரெசிடென்சியிலிருந்து இரண்டு சொகுசு பேருந்துகளில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் உள்ளிட்ட 95 பேர் புறப்பட்டு அதிகாலையில் குற்றாலம் சென்றடைந்தனர்.  அனைவருக்கும் வி.கே.என். விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டியது.  அனைத்து உறுப்பினர்களும் தம் வயது, உடல்நிலை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் அருவிகளில் ஆனந்த குளியல் அனுபவித்த காட்சியை காணக் கண் கோடி வேண்டும். மாலை 4 மணி அளவில் வி.கே.என். விருந்தினர் மாளிகையின் கூட்ட அரங்கில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர்,                     திரு சோமசுந்தரம் மற்றும் திரு முத்து மாணிக்கம் குழுவினரின் "வேடிக்கை விளையாட்டு" நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் வயிறு குழுங்க சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தது.

07.08.2014 வியாழன் காலை அருவிகளில் ஆனந்த குளியல் முடித்து சித்திரசபை, இளஞ்சி சுப்பிரமணி சுவாமி கோவில், தென்காசி காசி விசுவநாதர் ஆலயம் மற்றும் குற்றால நாதர் சுவாமி தரிசனம் செய்து, மாலை 5 மணி அளவில் பிரிய மனமில்லமால் குற்றாலத்தை விட்டு புறப்பட்டு வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனம் முடித்து நலமாய் திருச்சி வந்து சேர்ந்தனர்.

செயற்குழு கூட்டம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கற்பக விநாயகர் கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.


No comments:

Post a Comment