Sunday 6 April 2014

Seiga Porulai 2014

ஏப்ரல் மாதம் 6ம் நாள் (06.04.2014) ஞாயிற்றுகிழமை திருச்சி நகரத்தார் சங்க இளைஞர் அணியின் இரண்டாம் நிகிழ்ச்சியாக 'செய்க பொருளை 2014" என்ற நிகிழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு இளைஞர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி என்று பாராட்டினார்கள்.

'பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?" என்ற தலைப்பில் நமது நகரத்தார் இளைஞர், பங்கு சந்தை பயிற்றுனர், மக்கள் டிவி 'வளாகம்" நிகழ்ச்சி புகழ் திரு.R.நாச்சியப்பன் (Sornalaya Financial Academy, Chennai) அவர்கள் பங்கு சந்தையை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்றும், பங்குகளை தேர்ந்தேடுக்கும் பாங்கினை பற்றியும், எப்பொழுது வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்ற சுத்திரத்தை அறிய உதவும் மென்பொருளை இயக்குவது பற்றியும் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐம்பது நகரத்தார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இந்த நிகழ்ச்சி ஒரு அறிமுக பயிலரங்கமாகும்.  முழுமையான பயிலரங்கம் சிறப்பு கட்டணத்தில் நமது நகரதர்களுக்காக பிரத்தியேகமாக திருச்சியில் நடத்த தயார் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

இளைஞர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமை தாங்க, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமநாதன் அறிமுக உரையாற்ற, தலைவர்  திரு.S.ஆதப்பன் அவர்கள் விருந்தினரை சிறப்பு செய்ய, சுமார் 1 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment