Sunday 6 April 2014

Sevai Engal Velai

முதல் நிகழ்ச்சியின் பெரும் வெற்றிக்கு பிறகுஏப்ரல் மாதம் 6ம் தேதி  (06.04.2014) ஞாயிற்றுகிழமை திருச்சி நகரத்தார் சங்க மகளிர் அணியின் இரண்டாம் நிகிழ்ச்சியாக 'சேவை எங்கள் வேலை" என்ற கலந்துரையாடல் நிகிழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமிருந்து ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருது பெற்ற, மதுரையை சேர்ந்த திருமதி.சின்னப்பிள்ளை அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்து, கலந்து கொண்ட அனைவரையும் தன் நகைச்சுவை நிறைந்த பேச்சினால் கவர்ந்தார்.

அன்று 65 பேர் கலந்து கொண்டு, அவரிடம் பல கேள்விகள் கேட்டு களஞ்சியம் அமைப்பு பற்றியும், அவரின் தொண்டுகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.   

இதற்கு மகளிர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.அடைக்கலவன் செட்டியார் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.  மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.சந்தா சேதுராமன்  அறிமுக உரையாற்றதலைவர்  திரு.S.ஆதப்பன் அவர்கள் விருந்தினரை சிறப்பு செய்ய, விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment