Sunday 29 December 2013

Paper Quilling Program


டிசம்பர் மாதம் 29ம் நாள் (29.12.2013) ஞாயிற்றுகிழமை, திருச்சி நகரத்தார் சங்க மகளிர்  அணியின் முதல் நிகழ்ச்சியாக, குழந்தைகளுக்கான சிறப்பு ஆர்ட்ஸ் & கிராபிட்ஸ் பற்றிய வகுப்பு சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

குழந்தைகள் மத்தியில் படைப்பாற்றலை வளரச்செய்யும் முயற்சியில், சுவாரஸ்யமான "PAPER QUILLING" நிகழ்ச்சி ஒன்றை திருமதி.வித்யா அவர்கள் நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.சாந்தா சேதுராமன்  தொகுத்து வழங்கினார்.  மகளிர் அணி ஆலோசகர் முன்னாள் தலைவர் திரு.அடைக்கலவன் செட்டியார்  அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். 

காகிதத்தை வைத்து வெவ்வெறு அழகிய வடிவங்கள் செய்ய குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது.  பெற்றோர் உற்சாகத்துடன் குழந்தைகளை ஊக்குவித்தார்கள். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யுமாறு குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

இன் நிகழ்ச்சியில்  35 குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
      

No comments:

Post a Comment