Sunday 29 December 2013

Inspire 2013

டிசம்பர் மாதம் 29ம் நாள் (29.12.2013) ஞாயிற்றுகிழமை, திருச்சி நகரத்தார் சங்க இளைஞர் அணியின் முதல் நிகழ்ச்சியாக "INSPIRE 2013" என்ற நிகழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  "தொழிலதிபர் ஆவதற்கு முதலீடு முக்கியம் இல்லை" என்ற தலைப்பில் நமது நகரத்தார்கள் மத்தியில்  தொழில்  செய்யும் ஆர்வத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும்  உணர்ந்து அதற்கான முயற்சியில் ஒரு அற்புதமான பயிலரங்கத்தை உலம்கம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் திரு.லேனா நடராஜன் (CEO, Dolmatics Group, Chennai) அவர்கள் நடத்தி கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை  இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துமாணிக்கம் தொகுத்து வழங்கினார் .  இளைஞர் அணி ஆலோசகர் முன்னாள் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.  அவர்களது உரையில் திருச்சி நகரத்தார் சங்க வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி இதுவரை நடத்ததேயில்லை எனவும், நிகழ்ச்சி சிறப்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என பாராட்டினார்கள்.  மேற்படி நிகழ்ச்சியில் நகரத்தார் இளைஞர்கள் சுமார் நூறு பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் தொழில் கடன் பெற அணுக வேண்டிய அரசாங்க இலாக்ககளின் முகவரி மற்றும் மாவட்ட தொழில் மைய முகவரிகளும் அடங்கிய குறுந்தகடு பயிற்சியாளர் திரு.லேனா நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.  மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரதியாரின் "தொழில் முறை கர்ம யோகம்" என்ற கவிதை அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி சுமார் 1 மணியளவில் தேனீர் மற்றும்  கிட்லெட்டுடன்  நிறைவுற்றது.

No comments:

Post a Comment