Sunday 4 May 2014

Thiruvasagam Mutroothal

ஆன்மீகத்தில் செட்டியார்களின் ஈடுபாடு மிக அதிகம். இதன் உதாரணமாக திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கங்கத்தின் மகளிர் அணி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை மே மாதம் 4ந் தேதி (04.05.2014) சங்கக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோவில் குழுவினர்கள் வந்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.  காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 4 மணி வரை தொய்வின்றி, அனைவரும் பாராட்டும் வகையில் நடந்தது. 

'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப 100க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருவாசகம் என்னும் தேனைப் பருகி மகிழ்ந்து சென்றனர். 

வந்திருந்த அனைவர்க்கும் மோர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.  ஆன்மீக தலைவர் திரு SORM.கணபதி செட்டியார், திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோவில் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள்.  நிகழ்ச்சி தேனீர் மற்றும் snacksயுடம் இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment