Friday 2 January 2015

Joint Meeting - Kumbakonam Nagarathar Sangam

01.01.2015 அன்று மாலை 4.00 - 5.00  மணி வரை நிர்வாக குழு கூட்டம் இனிதே நடந்தேறியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம், செயலாளர் திரு SV.சுப்பையா, துணைச்செயலாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன், பொருளாளர் திரு SV.சாத்தப்பன் நால்வரும் கலந்து கொண்டார்கள்.  பின்பு 5.30 - 6.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடந்தது.  அதில் 25 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  பின் 6.30 மணிக்கு கார்த்திகைக் கூட்டம் கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.  பின்பு கும்பகோணம் நகரத்தார் சங்கத்திலிருந்து கூட்டு கூட்டத்திருக்கு வந்திருந்த கும்பகோணம் சங்கத் தலைவர் திரு PL.M.பழனியப்பன், பொருளாளர் திரு V.சுப்ரமணியம், சுவாமிமலை கட்டிடக் கமிட்டி தலைவர் திரு M..இராமசுவாமி, செயலாளர் Er.நாராயணன் மற்றும் துணைச்செயலாளர் திரு AV.அண்ணாமலை ஆகியோர்களை அறிமுகப்படுத்தினார்கள். கும்பகோணம் சங்கத் தலைவர் திரு PL.M.பழனியப்பன் அவர்கள் கும்பகோணம் சங்க நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.  கும்பகோணம் கட்டிடக் குழுவின் தலைவர் திரு M.இராமசுவாமி அவர்கள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ள சுவாமிமலை விடுதியின் சிறப்புகளை விவரித்தார்கள்.  திரு பெரியகருப்பன், முன்னாள் இயக்குனர், பாபா அணுசக்தி நிலையம் அவர்கள் அணுமின் நிலையங்களின் மகத்துவத்தை விளக்கினார்கள்.  Prof  M.சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் அவர்கள் அணுவின் சிறப்பை தமிழில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.  திரு M.இராமனாதன், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் பற்றி சிறப்பாக பேசினார்கள்.  செயலாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.  சங்கத்தின் சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment